பூபாலபிள்ளை பிரசாந்தன்

கிழக்குமாகாணத்தில் இருந்து ஒரு தமிழனின் சிந்தனைகள்

June 30, 2012
by prashanthan
0 comments

தேர்தலுக்காவே தங்களையும் கொள்கையையும் மாற்றும் கூட்டமைப்பு – முன்னாள் முதலமைச்சர்

இவ்வளவு காலமும் தமிழ் மக்களுக்காக எதனையுமே செய்யாத தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தற்போதுதான் கிழக்கு மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து சிந்திக்கிறார்களாம். இதனைக் கேட்டால் குழந்தப் பிள்ளைக்கும் சிரிப்பு வரும். ஏன் என்றால் தற்போது கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடாத்தபட உள்ள நிலையில், தங்களது கொள்ளைகளுக்கும் அப்பால். அதாவது வடகிழக்கு இணைந்த தனித் தமிழ் … Continue reading

June 30, 2012
by prashanthan
0 comments

கிழக்கு முதலமைச்சராக மீண்டும் சந்திரகாந்தன்.- சுசில் பிரேமஜயந்த

மாகாணசபைகள் கலைக்கப்பட்டதையடுத்து முதலமைச்சர்களாக இருந்தவர்களையே தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாக மீண்டும் நிறுத்தவுள்ளதாக ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு இன்று குறிப்பிட்டுள்ளதுஇந்த தீர்மானத்துக்கமைய கிழக்கு மாகண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சப்ரகமுவ முதலமைச்சர் மஹிபால ஹேரத் மற்றும் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேட்டி பிரேமலால் திஸாநாயக்க ஆகியோர் தத்தம் மாகாணங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அணிகளுக்கு … Continue reading

June 27, 2012
by prashanthan
0 comments

கட்சியை குழப்ப எடுக்கும் முயற்சியை முறியடிக்க தயாராக இருக்கிறோம் மா.ச.உ. பூ.பிரசாந்தன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், அதில் உள்ள மாகாண சபை உறுப்பினர்கள் வேறு கட்சிக்குள் சேர முற்பட்டுள்ளதாகவும் இணையத்தளத்தில் வெளியாகியுள்ள செய்தியானது அடிப்படையிலேயே கட்சியை குழப்ப மேற்கொள்ளப்படும் செய்தி என்பது தெளிவாகத் தெரிகின்றது. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மிகப் பலமடைந்து வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் … Continue reading

June 26, 2012
by prashanthan
0 comments

கிழக்கு மாகாண சபை பாலர் பாடசாலைக் கல்வி தலைமைப் பணியகம் மட்டக்களப்பிற்கு மாற்றம்

கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்வி தலைமைப் பணியகம் நேற்று முதல் மட்டக்களப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது.கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் திருகோணமலையில் இயங்கி வந்த நிலையில் அம்பாறை மாவட்ட மக்களின் நலன் கருதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் சிபார்சுக்கமைய இவ் அலுவலகம் இன்று முதல் மாற்றப்பட்டுள்ளது

June 21, 2012
by prashanthan
0 comments

யாருக்காகவும் எதற்காகவும் எம் இருப்பிடத்தை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை

எதிர்ப்பு அரசியலில் அபிவிருத்திகளை விட்டுக் கொடுக்கவோ கலப்பு அரசியலால் உரிமைகளை விட்டுக் கொடுக்கவோ த.ம.வி.பு கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் என்றும் தயார் இல்லை. தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்போம் என்று மக்களின் வரிப்பணத்தின் மூலம் கிடைக்கப்பெறும் அபிவிருத்திப் பணிகளை 65 வருடங்களாக ஏனைய சமூகங்களிற்கும் ஏனைய மாவட்டங்களிற்கும் கொடுத்து விட்டு அண்ணார்ந்து பார்க்கும் நிலையினையோ அல்லது அபிவிருத்தி … Continue reading

June 21, 2012
by prashanthan
0 comments

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அமேரிக்கா மக்கள் தொடர்ந்தும் உதவ முன் வரவேண்டும்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அமெரிக்கமக்கள் தொடர்ந்தும் உதவ முன் வரவேண்டும் கடந்த மூன்று தசாப்தங்களாக நடை பெற்ற யுத்தத்தில் அதிக தொடர் பாதிப்புக்களை நேரடியாக அனுபவித்து வந்தவர்கள் கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களே. இவர்களின் நிலைமைகளை புரிந்து கொண்டு அமெரிக்க சமூகம் எமக்கு மேற்கொண்டு வரும் அபிவிருத்திப் பணிகளை பாராட்டுவதுன் தொடர்ந்தும் உதவிகளை … Continue reading

June 20, 2012
by prashanthan
0 comments

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் களுதாவளை உறுப்பினர்களுக்கான பயிற்சி பயிற்றுவிப்பவர்களுக்கான செயலமர்வு.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் களுதாவளை உறுப்பினர்களுக்கான பயிற்சி பயிற்றுவிப்பவர்களுக்கான செயலமர்வு களுதாவளைப்பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அரசியல் பணிமனையின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பூ.பிரசாந்தன், முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஆசாத் மௌலானா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இப்பயிற்சிச் செயலமர்வில் அரசியல் … Continue reading

June 20, 2012
by prashanthan
0 comments

TMVP கட்சியின் கொள்கை பரப்புச் செயலமர்வு

செங்கலடி பிரதேசத்தில் இன்று கட்சியின் கொள்கை சம்பந்தமாகவும், கடந்தகால அரசியல் வரலாறு சம்பந்தமாகவும், அதனால் மக்கள் எதிர்நோக்குகின்ற நன்மை தீமைகள் சம்பந்தமாகவும், தற்போதைய அரசியல் நிலை சம்பந்தமாகவும் , கிழக்கு மாகாணத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பொறுப்பேற்ற பின்னர் மக்களின் வாழ்வு நிலை எவ்வாறுள்ளது என்பது சம்பந்தமாகவும், எதிர்கால மற்றும் தற்போதைய அபிவிருத்தித் … Continue reading

June 19, 2012
by prashanthan
0 comments

கிழக்கு மாகாண சபை கலைப்பு தொடர்பான இடைக்கால தடை உத்தரவுகோரும் மனு மீதான விவாதம் மேன்முறையீட்டு நீதிமன்றில் யூலை 11ந் திகதிக்கு ஒத்திவைப்பு.

கிழக்கு மாகாண சபையை கலைப்பது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சராகிய சிவநேசதுரை சந்திரகாந்தன், ஆளுனருக்கு ஆலோசனை வழங்குவதற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவனைக் கோரும் மனுவானது,இன்று(19.06.2012) மேன் முறையீட்டு நீதி மன்றில் நீதிபதிகள் சிகந்தராஜா மற்றும் திபாலி விஜயசுந்தர மன்னிலையில் விசாரணணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்போது முதலமைச்சர் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி பாயிஸ முஸ்தபா இம் … Continue reading

June 14, 2012
by prashanthan
0 comments

திட்டமிட்ட குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் பூ.பிரசாந்தன்

மண்முனைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட குடியேற்றங்கள் சட்டத்திற்கு முரணானது. இது நிறுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் இவ்வாறான குடியேற்றங்களினாலேயே தமிழ் முஸ்லிம் இனங்களிடையே இனமுறுகலலும், கலவரங்களும் ஏற்பட்டது. இது போன்று மீண்டும் இவ்வாறான நிலையில் திட்டமிட்ட சில முஸ்லிம் குழுக்களால் தாழங்குடா, வேடர் குடியிருப்பு, ஆரையம்பதி கிழக்கு பகுதிகளில் வேலி இடப்பட்டு அரச காணிகளும் தனியார் … Continue reading