பூபாலபிள்ளை பிரசாந்தன்

கிழக்குமாகாணத்தில் இருந்து ஒரு தமிழனின் சிந்தனைகள்

April 25, 2011
by admin
1 Comment

விளையாட்டுத் துறையினை ஸ்திரப்படுத்துதல்

சர்வதேச ரீதியில் முக்கியத்துவமடைந்துவரும் விளையாட்டுத்துறையினை எமது மாகாணத்திலும் மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் விளையாட்டுத் துறையினை ஸ்திரப்படுத்தல் என்ற தனிநபர் பிரேரணையினை எதிர்வரும் 26.04.2011 நடைபெறவுள்ள மாகாண சபை அமர்வில் முன்வைக்கவுள்ளார்.

April 25, 2011
by admin
0 comments

சித்திரைப் புதுவருட விளையாட்டு நிகழ்வு

பெரியபோரதீவு கோல்ட் சிற்றி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கழகத்தலைவர் இரா.ரதிவண்ணன் தலைமையில் பெரியபோரதீவு கோல்ட் சிற்றி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடாத்தப்பட்ட சித்திரைப் புதுவருட விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதீயாக கலந்து கொண்ட கிழக்குமாகாண முதலமைச்சரின் இணைப்புச்செயலாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்படுவதையும் சுவிஸ் உதயம் நிறுவனப்பொருலானர் க.துரைநாயகம் விஸ்வப்பிரம்மம் வை.இ.காந்தன் … Continue reading

April 21, 2011
by admin
0 comments

களுவாஞ்சிகுடி பொலிசாரின் புதுவருட விளையாட்டு விழா

சித்திரைப் புதுவருடத்தையொட்டி களுவாஞ்சிகுடி பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி மாணாமடு தலைமையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய வளாகத்தில் விளையாட்டு விழா நடத்தப்பட்டது. அங்கு விஜயம் செய்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன்;,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆலோசகர் க. துரைநாயகம் ஆகியோர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் உரையாடுவதையும், வழுக்கு மரம் ஏறும் போட்டியாளர்களை பார்வையிடுவதையும் படத்தில் … Continue reading

April 21, 2011
by admin
0 comments

பிரதேசசபைக்கு திடீர் விஜயம்

கிழக்கு மாகாணசபையின் உள்ளுராட்சி திணைக்களங்களுடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் வழங்குதல், சுகாதாரப்பணிகள், வீதி அபிவிருத்திப்பணிகளை துரிதமாக மேற் கொண்டுவரும் பிரதேசசபைகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள்கட்டுமானப்பணிகளையும் விரைவாக நடைமுறைப்படுத்திவரும் நிலையில் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் அவர்களின் பணிப்பிற்கு அமைய கிழக்கு மாகாணசபையின் இணைப்புச் செயலாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ. பிரசாந்தன் … Continue reading

April 21, 2011
by admin
0 comments

ஆரையம்பதி கடற்கரை வீதியிற்கு மின்விளக்குகள்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் அவர்களின் பிரத்தியேக நிதி மூலம் ஆரையம்பதி கடற்கரைவீதியிற்கு மின் விளக்குகள் பொருத்தப்பட்டது. சித்திரை வருடப்பிறப்பையடுத்து பெருந்தொகையிலான மக்கள் கடற்கரையிற்கு பொழுதுபோக்கிற்காக செல்வதனாலும், கடல் மீன்பிடித் தொழில் அதிகரித்து வருவதனாலும் கடற்கரைக்குச் செல்லும் வழி இருள் சூழ்ந்து காணப்படுவதால் வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆரையம்பதி கிழக்கில் இருந்து கடற்கரை வரையான … Continue reading

April 20, 2011
by admin
0 comments

பாலர் பாடசாலையிற்கு புத்தகப்பைகள் வழங்கிவைப்பு

ஆரையம்பதியிலுள்ள கிழக்குமாகாணசபை இணைப்புச் செயலகப் பணிமனையில் இன்று (20.04.2011) கிழக்குமகாணசபை உறுப்பினரும், இணைப்புச் செயலாளருமான பூ. பிரசாந்தன் அவர்களால் ஆரையம்பதி கோயில்குளத்திலுள்ள மெதடிஸ் சமாதானப் பாலர் பாடசாலையிற்காக திருமதி.தி.ஜெபநேசன் அவர்களிடம் பாடசாலைப் புத்தகப்பைகள் வழங்கிவைக்கப்;பட்டது. இதனைப் படத்தில் காணலாம்.

April 15, 2011
by admin
0 comments

எல்லோரும் மகான்களல்ல மனிதர்களே!

மனிதர்களாகப் பிறந்த எல்லோருக்குமே ஏதோ ஒரு துறையில் அபரிமிதமான நாட்டமிருக்கும் அந்த இலக்கை அடைவதற்கு முயற்சித்துக்கொண்டே இருப்பார்கள். வைத்தியருக்கு வைத்தியத்துறையில் பாண்டித்தியம் பெறவேண்டும் என்ற அவா இருக்கும் இறைதூதர்களுக்கு இறைவனின் திருநாமத்திலும் போதனைகளைப் போதிப்பதிலும் நாட்டமிருக்கும் பிறந்த மனிதன் இறப்பது உறுதி இறப்பதற்குள் பிறந்த பயனை விதைத்து விட்டுச் செல்லவேண்டுமே தவிர வீணான வாழ்கைத் தொலைப்பை … Continue reading

April 15, 2011
by admin
0 comments

சிறைச்சாலைக் கைதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிவைப்பு

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கிழக்கு மகாணசபை முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் அவர்களின் வேண்கோளுக்கிணங்க ஆகிலன் பொளன்டேசன் அனுசரணையுடன் கிழக்குமாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் அவர்களினால் மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (15.04.2011) ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது. இந் நிகழ்வில் கிழக்குமாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், அகிலன் பௌண்N;டசன் பணிப்பாளர் கோபாலக்கிருஸ்ணன், ளு.று.ழு … Continue reading

April 14, 2011
by admin
0 comments

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் அவர்களினால் சேலைகள் வழங்கிவைப்பு

கிழக்கு மாகாண இணைப்புச் செயலகம் ஆரையம்பதியில் இன்று (14.04.2011) மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் அவர்களினால் கணவணை இழந்த பெண்களுக்கும், பெண் தலைமை தாங்கும் குடும்பததை சேர்ந்த பெண்களுக்கும் சேலை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் உரையாற்றுவதையும், சேலைகளை வழங்கிவைப்பதையும் அத்துடன் அகிலன் பௌண்N;டசன் பணிப்பாளர் கோபாலக்கிருஸ்ணன் மற்றும் ளு.று.ழு … Continue reading

April 13, 2011
by admin
2 Comments

என்றும் எனது இனிய மக்களே!

காலம் பொன்னானது பல இன்னல்களை அனுபவித்த எம் சமூகம் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான ஜனநாயகப்பாதையில் பயணிப்பதற்கு பல தியாகங்களும் அற்பணிப்புகளும் தேவை. வேடிக்கை பார்ப்பதும் விதண்டாவாதங்களும் வீணான மனக்கசப்பையும் சில வேளைகளில் காதுக்கு இனிமைகளையும் தருமே தவிர நிரந்தர தீர்வாகவோ பசித்த வயிற்றுக்கு புசிக்க உணவாகவோ அமையாது. ஜதார்த்தம் உணராத முயற்சியும், இலக்கு இல்லாத பயணமும் வெற்றிதராது. … Continue reading