ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக்கழகம் 5வது வருடமாகவும் நடாத்திய ஏசியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிகள் 14,15,16ம் திகதிகளின் ஆரையம்பதி சாண்டோ சங்கரதாஸ் மைதானத்தில் போட்டிகள் தலைவர் மு.தேவகுமாரன் தலைமையில் நடைபெற்று முடிந்தது. ஏசியன ஸ்ரார், ஏசியன் ரகஸ், ஏசியன் வின்னர்ஸ், ஏசியன் ஸ்ரேஞ்சர்ஸ், ஏசியர் பைட்டர், ஏசியன் ஹீரோஸ், என 06 அணிகள் பங்குபற்றிய போட்டியில் இறுதிப் போட்டிக்கு ஏசியன் பைட்டர் அணியும் ஏசியன் வின்னர் அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகி ஏசியன் வின்னர் அணி வெற்றிக் கிண்ணத்தினை தமதாக்கி கொண்டது.
இப்போட்டி நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான திரு.பூ.பிரசாந்தன் அவர்களும், ஏசியன் விளையாட்டுக் கழக தலைவர் ஏ.விஜிதரன் அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
June 17, 2013
by prashanthan
0 comments
Continue Reading →

வறுமையை ஒழிக்கும் விசேட திட்டமான திவிநெகும (வாழ்வின் எழுச்சி) தொடர்பிலான மீளாய்வு கூட்டம் கடந்த 02.05.2013 அன்று மண்முனை வடக்கு பிரதேசத்தின் அபிவிருத்தி குழுத்தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோகசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


Continue Reading →