பூபாலபிள்ளை பிரசாந்தன்

கிழக்குமாகாணத்தில் இருந்து ஒரு தமிழனின் சிந்தனைகள்

June 17, 2013
by prashanthan
0 comments

5வது ஆரையம்பதி ஏசியன் பிரிமீயர் லீக் போட்டிகள்

ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக்கழகம் 5வது வருடமாகவும் நடாத்திய ஏசியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிகள் 14,15,16ம் திகதிகளின் ஆரையம்பதி சாண்டோ சங்கரதாஸ் மைதானத்தில் போட்டிகள் தலைவர் மு.தேவகுமாரன் தலைமையில் நடைபெற்று முடிந்தது. ஏசியன ஸ்ரார், ஏசியன் ரகஸ், ஏசியன் வின்னர்ஸ், ஏசியன் ஸ்ரேஞ்சர்ஸ், ஏசியர் பைட்டர், ஏசியன் ஹீரோஸ், என 06 அணிகள் பங்குபற்றிய போட்டியில் இறுதிப் போட்டிக்கு ஏசியன் பைட்டர் அணியும் ஏசியன் வின்னர் அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகி ஏசியன் வின்னர் அணி வெற்றிக் கிண்ணத்தினை தமதாக்கி கொண்டது.
இப்போட்டி நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான திரு.பூ.பிரசாந்தன் அவர்களும், ஏசியன் விளையாட்டுக் கழக தலைவர் ஏ.விஜிதரன் அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

20130617-033543 PM.jpgContinue Reading →

June 17, 2013
by prashanthan
0 comments

மாவிளங்குத் துறைக்கான புதிய வகுப்பறைக் கட்டடம்.

மண்முனைப்பற்று மாவிளங்குத்துறைக்கு முன்னாள் முதல்வர் சி.சந்திரகாந்தன் அவர்களின் பணிப்புக்கு அமைய 35 இலட்சம் ரூபா பெறுமதியான வகுப்பறைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு பாடசாலை அதிபர் வன்னியசிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்ஃவலயக் கல்வி கல்விப்பணிப்பாளர் திருமதி.சுபா சக்கரவர்த்தியும் கௌரவ அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் ப+.பிரசாந்தன், கோட்டக் கல்வி பணிப்பாளர் திரு.கந்தசாமி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

June 17, 2013
by prashanthan
0 comments

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பொதுச் சபைக் கூட்டம்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் சபைக் கூட்டம் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் 16.06.2013 அன்று கட்சி தலைமை காரியாலயத்தில் நடாத்தப்பட்டது.

Continue Reading →

June 12, 2013
by prashanthan
0 comments

பொதுச்சபைக் கூட்டம்

20130612-111605 PM.jpg தமிழ் மக்கள் விடுதலை; புலிகள் கட்சியின் மாதாந்த பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 16.06.2013ம் திகதி லேக் வீதியில் அமைந்துள்ள கட்சி காரியாலயத்தில் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளதென கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

20130505-072900-AM.jpg

May 4, 2013
by prashanthan
0 comments

வறுமையை ஒழிக்கும் விசேட திட்டமான திவிநெகும

20130505-072900 AM.jpg வறுமையை ஒழிக்கும் விசேட திட்டமான திவிநெகும (வாழ்வின் எழுச்சி) தொடர்பிலான மீளாய்வு கூட்டம் கடந்த 02.05.2013 அன்று மண்முனை வடக்கு பிரதேசத்தின் அபிவிருத்தி குழுத்தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோகசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பிரதேச அபிவிருத்தி குழுத்தலைவர் சந்திரகாந்தன் அவர்களின் ஆழுகைக்குட்பட்ட பிரதேச செயலகங்களான வாகரை,வாழைச்சேனை,கிரான்.செங்கலடி மற்றும் மட்டக்களப்பு ஆகிய 5 பிரதேச செயலகங்களிலுமுள்ள கிராமங்கள் தோறும் தலா 50 குடும்பங்களைத் தேர்வு செய்து, அவர்களது வறுமையை முற்றாக ஒழிப்பதே இலக்காகக் கொண்டு வாழ்வின் எழுச்சி திட்டம்
Continue Reading →

20130502-100836-PM.jpg

May 2, 2013
by prashanthan
0 comments

அதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபையைப் பலப்படுத்துவோம் – தலைவர்-த.ம.வி.புலிகள்

இன, மத, மொழி பேதங்களுக்கப்பால் அதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபையைப் பலப்படுத்தி அதன் மூலம் சிறுபான்;மையினத்தவரின் அரசியல் அதிகாரங்களும் கிடைக்க வழிஏற்படுத்தப்படவேண்டும் என்று இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் பிரமாண்டமான முறையில் அனுஸ்டிக்கப்பட்ட மேதின நிகழ்வின்போது சிறப்புரையாற்றும்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி. சந்திரகாந்தன் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கிழக்கு வாழ் தமிழ் மக்களின் தனித்துவமான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தொழிலாளர்களை கௌரவிக்கும் இந்நிக்ழவினை மக்களோடு மக்களாக ஒன்றுசேர்ந்து அனுஸ்டித்துவருகின்றது. அந்தவகையில் கிழக்கில் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசுடன் ஒன்று சேர்ந்திருந்தபோதிலும், கிழக்குவாழ் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அதிகாரங்களுக்காக தொடர்ந்தும் குரல்கொடுக்கும் கட்சி என்பதை நாம் நிரூபித்து வருகின்றோம்.

இலங்கைத் தேசத்தின் ஒற்றுமைக்கு தடையாக இருப்பவையாக இன, மத வேறுபாடு காணப்படுகின்றது. ஆனால் அவற்றையெல்லாம் கழைந்து எல்லா இனங்களும் , சமூகங்களும் தமது அதிகாரங்களை சரியான முறையில் பெற்றுக்கொள்கின்றபோதே ‘நாம் இலங்கையர்’ என்ற தேசிய உணர்வு எல்லோர் மனத்திலும் ஆழமாகப் பதியும். Continue Reading →

May 2, 2013
by prashanthan
0 comments

ஆரையம்பதி கிழக்கில் தலையிடுவதை காத்தான்குடி நிர்வாகம் நிறுத்தவேண்டும் – மேதின அறைகூவல்

20130502-100629 PM.jpg
மட்டக்களப்பின் தமிழ் பகுதியான ஆரையம்பதி கிழக்கு பகுதிக்குள் காத்தான்குடி நகரசபை, காத்தான்குடி பிரதேச செயலகத்தின் நிருவாக தலையீடுகள் மூலம் எமது பிரதேசத்தினை அடக்க முற்படுவது நிறுத்தப்பட்டு நாம் எமது பிரதேசத்தின் நிருவாக செயற்பாடுகளை சுயமாக செய்ய இடமளிக்கவேண்டுமென தெரிவித்துள்ள ஆற்றல் பேரவையின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன், இவ்வாறான நடவடிக்கைகள் ஒரு இனத்தை இன்னொரு இனம் சந்தேக கண்கொண்டு பார்க்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

உலக தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு ஆரையம்பதியில் நடைபெற்ற நிகழ்வில் அவர் விடுத்த மேதின செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்தார். Continue Reading →

May 1, 2013
by prashanthan
0 comments

ஆற்றல் பேரவையின் மேதின அறைகூவல் – 2013

ஆற்றல் பேரவையின் உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட உலகத் தொழிலாளர் தினத்தில் எம் மண்முனைப்பற்று உழைக்கும் மக்களின் கோரிக்கைகள் இத்தால் வெளியுலகிற்கும் ஆளும் அரசின் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் மேலான கவனத்திற்கும் கொண்டு வருகின்றோம்.
மிக அதிகமான உழைப்பாளிகளைக் கொண்டுள்ள எமது மண்முனைப்பற்றின் மக்கள் மிக மோசமாக அரசியல் அனாதைகளாக எடுப்பார் கைப்பிள்ளையாக பாதிக்கப்பட்ட நிலையில் பின்வரும் தீர்மானங்களை வெளிக்கொண்டு வருகின்றோம். Continue Reading →

20130501-105849-PM.jpg

May 1, 2013
by prashanthan
0 comments

மே தினம்

மே தினம். ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!’ (workers of all lands unite!) என்ற மார்க்ஸிய எழுச்சிக் குரலின் புரட்சி வடிவம். தொழிலாளர்களின் நலனை கருதாது உழைப்பை மட்டும் முடிந்தளவு உறிஞ்சும் 19ஆம் நூற்றாண்டின் தொழில் புரட்சியின் மோசமான பக்கவிளைவை எதிர்த்து உண்மையிலேயே உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட்ட, உரிமை தரப்படாதவிடத்து, தாமாகவே எடுத்துக்கொள்ளும் புரட்சியின் செயல்வடிவத்தின் நினைவுநாள்.
Continue Reading →

April 22, 2013
by prashanthan
0 comments

கோவில்குழம் பவர்வோய்ஸ் சித்திரைப் புதுவருடக் கொண்டாட்டம்

கோவில்குழம் பவர்வோய்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதுவருட கலாசார விளையாட்டுக்கள் கோவில்குழம் பவர்வோய்ஸ் மைதானத்தில் கழகத்தலைவர் க.தயாழகுமார் தலைமையில் நடத்தப்பட்டது இதில் அதிதிகளாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் இலங்கை உயர்தொழில்நுட்ப நிருவாகபிரந்திய கற்கை நிலைய இணைப்பாளர் எஸ். ஜெயபாலன் அதியர் எஸ்.கமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

20130422-104549 AM.jpgContinue Reading →